தேடல்

திரும்பவும் வருவேன்ல *யுவராஜ் நம்பிக்கை

உலககோப்பை டுவென்டி-20 போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்குவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.யுவராஜ் சிங் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் கீமோதெரபி சிகிச்சை மூலம் முழுமையாக குணம் அடைந்தார். நாடு திரும்பிய சில மாதங்களில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் யுவராஜ் சிங், செப்., மாதம் இலங்கையில் துவங்கவுள்ள உலக கோப்பைடுவென்டி-20 போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்க முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார். 2007 உலக கோப்பைடுவென்டி-20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து அசத்தினார்.யுவராஜ்சிங் கூறுகையில், கீமோதெரபி சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் முன்பு போல் பயிற்சியில் ஈடுபட முடியாமல் அவதிப்பட்டேன். உணவு கட்டுப்பாடு, யோகா போன்ற பயிற்சி மூலம் தற்போது முன்னேற்றம் தெரிகிறது. விரைவில் முழுஉடற் தகுதி பெற்று இலங்கையில் துவங்கவுள்ள டுவென்டி-20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெறுவது சவாலாக இருந்தாலும் முயற்சிப்பேன், என்றார்.