ராம்லீலா விவகாரம்: போலீசார் மீது நடவடிக்கை

புதுடில்லி: ராம்லீலா மைதானத்தின் பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில், போராட்டத்தின் போது போலீசாரின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த டில்லி போலீஸ் தலைவர் பி.கே. குப்தா, ராம்லீலா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிப்பதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.