தேடல்

ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் :கோரிக்கைகளை நிறைவேற்ற "கோஷம்'

பந்தலூர் : பந்தலூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகள் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவை பழைய முறைக்கு மாற்றிட வேண்டும்; பாமாயில், பருப்பு, பச்சரிசியை அனைத்து கார்டுகளுக்கும் பாகுபாடின்றி வழங்கிட வேண்டும்; ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படும் முறைகேடுகளை கண்டறிந்து களையவும், விசாரணை நடத்திடவும் தனிக்குழு அமைக்க வேண்டும்; தகுதியுள்ள குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கிடவும், போலி கார்டுகளை ஒழிக்கவும்; அதற்கு துணை நின்ற அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
எருமாடு பகுதியில் சுரேஷ் தலைமையில், பாஸ்கரன் துவக்கி வைத்தார். சேரம்பாடியில் வேலாயுதன் தலைமையில், தமிழ்மணி துவக்கி வைத்தார்.
சேரங்கோட்டில் மணிகண்டன் தலைமையில், பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். அய்யன்கொல்லியில் ராஜன் தலைமையில், ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.