தேடல்

லண்டனில் ஒலிம்பிக் ஜோதி

லண்டன்:ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், ஒலிம்பிக் ஜோதி லண்டன் வந்து சேர்ந்தது.லண்டனில் வரும் 27ம் தேதி 30வது ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதற்கான ஜோதி ஓட்டம் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் நடந்தது வந்தது. இதனிடையே ஒலிம்பிக் துவங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், ஜோதி லண்டன் நகரை வந்து சேர்ந்தது.நேற்று முன்தினம் லண்டனில் சூரியன் மறையத் துவங்கியதும், தேம்ஸ் நதிக்கரையில் கடற்படையின் ஹெலிகாப்டர் வட்டமிடத் துவங்கியது. சிறிது நேரத்தில் அதிலிருந்து பெல்ட் மூலம் இணைக்கப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, அப்படியே தொங்க விடப்பட்டது. பின், 2008 ஆப்கன் போரில் காயமடைந்து மீண்ட வீரர் வில்லியம்ஸ், 23, என்பவரிடம் இருந்து, 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் (800, 1500 மீ.,) வென்ற கெல்லி ஹோல்ம்ஸ் ஜோதியை பெற்றுக்கொண்டார். இதைப் பார்ப்பதற்கு ஹாலிவுட் அதிரடி சினிமாவைப் போல இருந்தது.இந்த ஜோதியை இந்தவாரம் முழுவதும் லண்டனில் அனைத்து பகுதிகளுக்கும், 982 பேர் எடுத்துச் செல்வர். கடைசியாக எடுத்து செல்பவர், ஒலிம்பிக் துவக்க விழாவின் போது, மைதானத்துக்குள் கொண்டு வருவார்.--