தேடல்

வயல்வெளியில் பெண் மண்டை ஓடு : தேவகோட்டையில் பரபரப்‌பு

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த பகுதியில் உள்ள வயல்வெளியில் பெண் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருவாச்சி - பூதக்குடி பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில், பெண்ணின் மண்டை ஓடும், சிறிது தொலைவில் எலும்புகளும் கிடப்பதாக பொதுமக்கள் போலீசில் தகவல் அளித்தனர். விசாரணை செய்த போலீசார், அது பெண்ணின் மண்டை ஓடுதான் என்பதை உறுதி செய்தனர். அப்பெண்ணின் ஆடைகளும் மீட்கப்பட்டன. பூதக்குடி பகுதி‌யை‌ சேர்ந்தவர் கருப்பசாமி மகள் பாக்யம் (23). இவருக்கு திருமணம் நிச்சயமான நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி இவர் மாயமானார். தற்போது மீட்கப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு, பாக்யத்துடையதா என்ற கோணத்தில் மோப்ப நாய் உதவியுடன்தடயவியல் துறையினர் மற்றும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.