தேடல்

விக்கிரவாண்டி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்:விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் புதிய ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.விக்கிரவாண்டி டோல்கேட் அருகிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், நெடுஞ்சாலை அருகே புதியதாக ஆசீர்வாத ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. இதன் கும்பாபிஷேகத்தை யொட்டி யாக சாலை பூஜைகள் நடந்து வந்தது.நேற்று யாக சாலை பூஜைகள் முடிந்து, காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. இதன் பின், ஆஞ்சநேயர் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆசீர்வாத ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழாவில், விக்கிரவாண்டி சுற்றியுள்ள கிராம பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.