28ம் தேதி ஸ்டிரைக்கில் என்.ஜி.ஓ., யூனியன் பங்கேற்காது

தூத்துக்குடி : 28ம் தேதி நடைபெறும் ஸ்டிரைக்கில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கலந்து கொள்ளாது என்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். கூட்டத்தில் செயலாளர் மெல்வின் விக்டர், யூசுப் ஷரீப், தங்கையா, எலிசா, துளசிராமன், கடற்கரை, சந்திரசேகரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராமலிங்கம் நன்றி கூறினார். கூட்டத்தில், வரும் 28ம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் அதைச் சார்ந்திருக்கின்ற இணைப்பு சங்கங்கள் மற்றும் தோழமை சங்கங்கள் ஆகியவை கலந்து கொள்ளாது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.